அபிநந்தன் விடுதலைக்கு வரவேற்பு தெரிவித்த அமெரிக்கா
பிப்ரவரி 27ம் தேதி பாகிஸ்தான் ராணுவத்தால் இந்திய விமான படை வீரர் அபிநந்தன் கைது செய்யப்பட்ட நிலையில் இந்திய அரசு எடுத்த தீவிர முயற்சியால் நேற்று அபிநந்தன் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்ததற்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது. பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் தருவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா மீண்டும் எச்சரித்துள்ளது. பயங்கரவாத அமைப்புகளுக்கு கொடுக்கப்படும் நிதியையும் பாகிஸ்தான் உடனடியாக நிறுத்த வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் போர் பதற்றம் விரைவில் முடிவுக்கு வரும் என்றும், இந்த பதற்றத்துக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த அமைப்புகள் புல்வாமா பகுதியில் நடத்திய தாக்குதலே காரணம் என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.