அன்புச்செழியனை மிகைப்படுத்தி சித்திரிப்பதாகத் தோன்றுகிறது: விஜய் ஆண்டனி
இயக்குனர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமாரின் மரணம் நடிகர், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கருத்து கூறியபோது, அன்புச்செழியனுக்கு ஆதரவான கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
நடிகர் சசிகுமார் அவர்கள் மிகவும் சிறந்த இயக்குனர் மற்றும் நல்ல மனிதர். அவரது உறவினர் அசோக்குமார் அவர்களின் தற்கொலையை நினைத்து நான் மிகவும் மனவேதனைப்படுகிறேன். அசோக்குமார் அவர்கள் தனது மனைவி, பெற்றோர் மற்றும் குழந்தைகளை தவிக்கவிட்டுவிட்டு தற்கொலை முடிவை தவிர்த்திருக்க வேண்டும்
’நான் கடந்த 6 வருட காலமாக, தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர் அன்புச் செழியனிடம் பணம் வாங்கித்தான் படம் எடுத்து வருகிறேன். அதை, முறையாகத் திரும்ப செலுத்தியும் வருகிறேன். இதுநாள் வரை அன்புச் செழியன் என்னிடம் சரியான முறையில்தான் நடந்து வருகிறார். அனைவரும் அவரை சற்று மிகைப்படுத்தி சித்திரிப்பதாகத் தோன்றுகிறது’
திரைப்படத்துறையில் 99% தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் கடன் வாங்கி படம் எடுத்துதான் இந்நாள் வரையில் முன்னேறி இருக்கிறார்கள். திரு அசோக்குமார் அவர்களின் மரணம் தற்கொலையின்ன் கடைசி மரணமாக இருக்க வேண்டும். நான் தற்கொலைக்கு எதிரானவன். ஏனென்றால் தற்கொலை செய்து கொண்ட என் தந்தையால் நானும் என் தாய் மற்றும் என் குடும்பம் அனுபவித்த கஷ்டம் எனக்கு நன்றாக தெரியும். ‘எனக்கும் கடன் இருக்கிறது, உழைத்துக்கொண்டிருக்கிறேன். என்று தனது அறிக்கையில் விஜய் ஆண்டனி கூறியுள்ளார்
Leave a Reply
You must be logged in to post a comment.