அன்னை தெரசாவாக நடிப்பது யார்? புதிய தகவல்
கடந்த சில வருடங்களாக இந்திய திரையுலகில் பல பிரபலமானவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் வெளிவந்து வெற்றி பெற்று வரும் நிலையில் தற்போது கொல்கத்தாவில் ‘பிறர் அன்பின் பணியாளர்’ என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவிய அன்னை தெரசா வாழ்க்கை வரலாறு திரைப்படம் இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் உருவாகி வருகிறது.
பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்று இந்த படத்திற்கான முயற்சிகள் மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது
அன்னை தெரசாவின் இந்த திரைப்படத்தை சீமா உபத்யாய் என்பவர் இயக்கவுள்ளார். இந்த படத்தில் ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் நடிக்க உள்ளதாகவும் ஹாலிவுட், பாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்களும் இந்த படத்தில் பணியாற்றவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் வரும் 2010ஆம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.