அனில் அம்பானி சிறை செல்ல நேரிடும்: உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
எரிக்சன் நிறுவனத்துக்கு ரூ.453 கோடி செலுத்தாத வழக்கின் விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலலியில் இன்று மீண்டும் இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்தது. இன்றைய விசாரணையின்போது அனில் அம்பானி உச்சநீதிமன்றத்தில் ஆஜரானார்.
இன்றைய விசாரணையில் ரூ.453 கோடியை எரிக்சனுக்கு தராவிட்டால் அனில் அம்பானி சிறை செல்ல நேரிடும் என்றும், பணத்தை கொடுக்காவிட்டால் 3 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது. மேலும் ரூ.453 கோடி பணத்தை அனில் அம்பானி, எரிக்சன் நிறுவனத்திற்கு நான்கு வாரங்களில் திரும்ப செலுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.