நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனிதா சம்பத், சுரேஷ் சக்கரவர்த்தி கூறிய ஒரு விஷயத்தை பெரிதாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
நியூஸ் வாசிக்கும் போது எச்சில் தெறிக்கும் என்று சுரேஷ் சக்ரவர்த்தி கூறியதாக அனிதா சம்பத் குற்றம்சாட்ட நான் பொதுவாக போதவில்லை எனக்கு தெரிந்த ஒரு நியூஸ் ரீடருக்கு அவ்வாறு எச்சில் தெறிக்கும் என்றுதான் கூறினேன் என்று சுரேஷ் சக்ரவர்த்தி விளக்கம் கொடுத்தார்
இந்த விவகாரம் சூடு பிடித்தது. சுரேஷ் சக்ரவர்த்தி ஒரு வயதான பெரியவர் என்றும் பாராமல் அனிதா சம்பத் ஆவேசமாக பேசியது அவருடைய தைரியத்தை முன்னிறுத்துவதாக தெரிந்தது
ஆனால் அதே நேரத்தில் இந்த விஷயத்தை அவர் சற்று பெரிதாக்கி விட்டாரோ என்றும் எண்ணத்தோன்றுகிறது மொத்தத்தில் பிக்பாஸ் வீட்டில் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்றால் சண்டை போட வேண்டும் என்ற முதல் கொள்கையை கடைபிடித்து வருகிறார் அனிதா என்று தெரிகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.