அத்திவரதர் பக்தர்களுக்கு துணை ராணுவத்தினர் பாதுகாப்பா? திங்களன்று தீர்ப்பு
அத்திவரதர் தரிசனம் தொடர்பான வழக்குகளில் திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது
அத்திவரதரை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு மத்திய துணை ராணுவ பாதுகாப்பு, வரதராஜர் சன்னதி திறப்பு, உயிரிழந்தவர்களுக்கு ரூ15 லட்சம் இழப்பீடு உள்ளிட்ட 5 வழக்குகளில் திங்கட்கிழமை தீர்ப்பு என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது
முன்னதாக மருத்துவம், சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அத்திவரதர் தரிசனத்தின் போது, நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் தமிழக அரசுத்தரப்பு விளக்கம் அளித்துள்ளது. அத்திவரதர் தரிசனத்தில், நெரிசலில் சிக்கி யாரும் உயிரிழக்கவில்லை என்றும், தரிசனம் முடிந்து, கோயிலுக்கு வெளியில் வந்த பிறகே, 6 பேரும் உயிரிழந்ததாகவும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.