அத்திவரதர் கோவில் பாதுகாப்பு ஏற்பாடுகள்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பேட்டி

அத்திவரதர் கோவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சற்றுமுன் பேட்டி அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

அத்திவரதர் கோவில் பகுதியில் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை குப்பைகள் சுத்தம் செய்யப்படுகிறது என்றும், பக்தர்களுக்கு கூடுதலாக கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும், பக்தர்கள் ஓய்வெடுக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்றும், மருத்துவ முகாம்களும், மருத்துவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும், பக்தர்களுக்கு குடிநீர், பிஸ்கட், மோர் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் மாவட்ட ஆட்சியர் பேட்டி அளித்தார்.

Leave a Reply