shadow

அதிமுக வாக்குவங்கியை ரஜினியால் பெற முடியாது: ஜெயகுமார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுகவின் வாக்குவங்கி பிரியும் என்றும் குறிப்பாக எம்ஜிஆரின் ரசிகர்கள் இதுவரை அதிமுகவுக்கு ஓட்டு போட்டு வந்த நிலையில் ரஜினி அரசியலில் இறங்கினால் அவருக்குத்தான் ஓட்டு போடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய அமைச்சர் ஜெயகுமார், ‘ரஜினி அரசியலுக்கு வருவதால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், அதிமுக வாக்குவங்கியை ரஜினியால் எதுவும் செய்ய முடியாது என்றும் கூறியுள்ளார்.

மேலும் ரஜினியால் மட்டுமல்ல, யாராலும் அதிமுகவின் வாக்குவங்கியை சிதைக்க முடியாது என்றும் அமைச்சர் ஜெயகுமார் உறுதிபட கூறியுள்ளார். உள்ளாட்சி தேர்தல், திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளின் இடைத்தேர்தலை நடத்தாமல் இன்னும் வாக்கு வங்கி இருப்பதாக அமைச்சர் ஜெயகுமார் கூறியதை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

Leave a Reply