அதிமுக-பாஜக கூட்டணி அறிவிப்பு தாமதம் ஏன்?
இன்று காலை அதிமுக கூட்டணியில் பாமக இணைந்தது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் வெளிவந்த நிலையில் அடுத்தகட்டமாக பாஜகவுக்கு ஒதுக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்த பேச்சுவார்த்தையும் முடிந்துவிட்டது.
ஆனால் இன்று மாலை 4.30 வரை ராகு காலம் என்பதால் அதிமுக-பாஜக தொகுதிப் பங்கீடு அறிவிப்பில் தாமதம் என தகவல் வெளிவந்தூள்ளது; தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை முடிந்த நிலையில் 4.30 மணிக்கு மேல் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
அதேபோல் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுவதும் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவும், அக்கட்சிக்கு ஒதுக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்த தகவல்களும் இன்று இரவுக்குள் அறிவிக்கப்படும் என்றும் தெரிகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.