அதிமுக எம்.பி மீது அன்வர்ராஜா மீது தாக்குதல்
அரவக்குறிச்சி அருகே அதிமுக எம்.பி அன்வர் ராஜாவை சிலர் தாக்கியதாக போலிஸில் அதிமுகவினர் புகார் மனு கொடுத்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் வரும் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.
இந்த நிலையில் அரவக்குறிச்சி பகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அதிமுக எம்பி அன்வர்ராஜா ஈடுபட்டிருந்தபோது அவரை மர்ம நபர்கள் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.