shadow

அதிமுகவில் இணைந்தால் பதவி உறுதி: தினகரன் ஆதரவாளர்களுக்கு வலைவீசிய அமைச்சர்

அதிமுகவில் இருந்து பிரிந்து அமமுக என்ற கட்சியை நடத்தி வரும் டிடிவி தினகரன், அதிமுக, திமுக என இரு கட்சிகளுக்கும் சிம்ம சொப்பனமாக இருந்து, ஆர்கே நகர் தேர்தலில் வெற்றி பெற்றார். இதனால் இவருடைய செல்வாக்கு அதிகரித்ததாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அவரது கூடாரமே காலியாகும் நிலை இருப்பதாக கூறப்படுகிறது.

தினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி இன்று ஸ்டாலின் தலைமையில் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தினகரனை தவிர அனைவரையும் மீண்டும் கட்சியில் சேர்த்து கொள்ள தயாராக இருப்பதாக நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்தால் அவர்களின் செயல்பாட்டிற்கு ஏற்ப உரிய பதவியை ஈபிஎஸ்-ஓபிஎஸ் வழங்குவார்கள் என்று ஆசை காட்டியுள்ளார். இதனால் தினகரன் ஆதரவாளர்கள் மீண்டும் அதிமுகவில் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply