அதிகார வர்க்கத்தின் கைப்பொம்மை தான் தேர்தல் ஆணையம்: வைகோ

மேற்கு வங்கத்தில் தேர்தல் பரப்புரையின் போது வன்முறை ஏற்பட்டதால் பரப்புரையை முன்னதாகவே முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதாவது நாளை மாலை 5 மணி வரை பரப்புரை செய்யலாம் என்றிருந்த நிலையில் இன்று காலை 10 மணியுடன் பரப்புரையை நிறுத்த தேர்தல் ஆணையம் உத்தவிரட்டது.

இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவுக்கு பல கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இதுகுறித்து கூறியபோது, ‘ மேற்கு வங்கத்தில் பரப்புரையை முன்னதாகவே முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது எதேச்சதிகார செயல் என்றும், அதிகார வர்க்கத்தின் கைப்பொம்மையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply