அண்ணா பல்கலையில் பகவத் கீதை படிப்பு: வழக்கம்போல் எதிர்ப்பு கிளம்புமா?

தமிழக அரசும், மத்திய அரசும் எந்த திட்டத்தை தொடங்கினாலும் உடனே எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு அந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த திட்டத்தை நிறுத்துவதில் குறியாக உள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது

இந்த நிலையில் தற்போது அண்ணா பல்கலைகழகத்தில் பொறியியல் மாணவர்களுக்கு தத்துவவியல், பகவத் கீதை படிப்பு அறிமுகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழுமத்தின் அறிவுறுத்தலின்படி இந்த படிப்பு இணைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

பொறியியல் மாணவர்களின் 3வது செமஸ்டரில் தத்துவவியல் படிக்க வேண்டியிருக்கும் என்றும், சென்னையில் உள்ள எம்.ஐ.டி, சி.இ.ஜி, ஏ.சி.டி, எஸ்.ஏ.பி வளாகத்தில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் இந்தாண்டு முதல் தத்துவவியல் படிப்பு அறிமுகம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுல்ளது.

Leave a Reply