அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் இன்று நடைபெறும்: தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை கொட்டி தீர்த்து வரும் நிலையில் இன்றும் சென்னை மாவட்டம் உள்பட ஒருசில மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இருப்பினும் இன்று நடைபெறும் அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்று திட்டமிட்டபடி அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார். நேற்றை தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டது தெரிந்ததே இருப்பினும் கனமழையால் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் இன்று நடக்கவிருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவாரூர் உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் ஏற்கனவே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.