அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் ஒரு ஊழல்: திடுக்கிடும் தகவல்
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் ஒரு மிகப்பெரிய ஊழல் வெளிச்சத்துக்கு வந்து அதன் பரபரப்பே இன்னும் நீங்காத நிலையில் தற்போது அதே பல்கலையில் மேலும் ஒரு ஊழல் என புகார் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
கடந்த 2000ஆம் ஆண்டுக்கு பின்னர் பொறியியல் முடிக்காத மாணவர்களுக்கு 2018 பிப்ரவரி மாதத்தில் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், பணம் வாங்கிக்கொண்டு இந்த அனுமதியை கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
2018ஆம் ஆண்டு பிப்ரவரியில் 50 ஆயிரம் பேர் தேர்வு எழுதியதாகவும், அவர்களில் சிலரிடம் பணம் பெற்றுக்கொண்டு தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு வெளிவந்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்த புகார் குறித்து அண்ணா பல்கலையின் தேர்வுத்துறை அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.