சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசினர் தோட்ட மெட்ரோ ரயில் நிலைய, இணைப்பு சுரங்க பாதை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நேற்று திறக்கப்பட்டது.

சென்னை, அண்ணா சாலை – வாலாஜா சாலை சுரங்கப்பாதை வழியாக, அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையம் செல்லவதற்காக அமைக்கப்பட்டிருந்த இணைப்பு சுரங்கப்பாதை பணி கடந்த சில வருடங்களாக நடைபெற்றது

இந்த நிலையில் தற்போது பணி முழுமையாக முடிவடைந்ததை அடுத்து நேற்றுமுதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

வாலாஜா சாலை, எல்லீஸ் சாலை, பிளாக்கர்ஸ் சாலை மற்றும் அண்ணா சாலையில் வரும் பொதுமக்கள் இனிமேல் இந்த சுரங்கப் பாதை வழியாக, அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்திற்கும் காதி பவன் மற்றும், ஓமந்துாரார் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கும் செல்லலாம்.

Leave a Reply