அண்ணாமலைப் பல்கலையில் ஆப்பிரிக்க மாணவர்களுக்கான பட்டச் சான்றிதழ் வழங்கும் விழா
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் பயிலும் ஆப்பிரிக்க மாணவர்களுக்கான 5-வது பட்டச்சான்றிதழ் வழங்கும் விழா பல்கலைக்கழக டெக்பார்க் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
பல்கலைக்கழக துணைவேந்தர் செ.மணியன் பங்கேற்று பல்கலையில் பயிலும் ஆப்பிரக்க நாட்டைச் சேர்ந்த 94 மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டி பேசினார். அவர் பேசுகையில் மாணவர்கள் இருநாட்டிற்கு இடையே பாலமாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
விழாவில் பதிவாளர் (பொறுப்பு) கே.ஆறுமுகம், ஆட்சி மன்றக்குழு உறுப்பினரும், கடல்அறிவியல் புல முதல்வருமான கே.கதிரேசன், வேளாண்புல முதல்வர் எம்.ரவிச்சந்திரன், மொழிப்புல முதல்வர் முனைவர் வி.திருவள்ளுவன், பன்னாட்டு மாணவர்கள் இயக்குநர் முனைவர் டி.ராம்குமார், கல்வி திட்ட இயக்குநர் கே.மணிவண்ணன், பொருளியல் துறை தலைவர் முனைவர் ரவி, முனைவர் சுப்பையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.