அணி மாறும் தனி மாவட்ட எம்.எல்.ஏ
தமிழகத்தின் 33வது மாவட்டமாக இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் அறிவித்தார். இந்த தொகுதியின் எம்.எல்.ஏ பிரபு, தினகரனின் ஆதரவாளர் என்பதால் எம்.எல்.ஏ பிரபுவுக்கும், தினகரனுக்கும் வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் இருந்தது
ஆனால் இதெல்லாம் சில மணி நேரம்தான். கள்ளக்குறிச்சியை தலைநகராகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகிய சில நிமிடங்களில் கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ., பிரபு, தினகரன் அணியிலிருந்து அதிமுகவுக்கு அணி மாறுகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தினகரன் தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஏற்கனவே தினகரன் அணியில் இருந்து செந்தில் பாலாஜி திமுகவுக்கு சென்றுவிட்ட நிலையில் தற்போது பிரபுவும் அதிமுகவுக்கு செல்லவிருப்பது தினகரன் அணிக்கு பெரும் பின்னடைவாக கருதபடுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.