shadow

அக். 23-இல் அறிவியல் படைப்பு திறனாய்வுப் போட்டி

1மயிலாப்பூர் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்தின் அறிவியல் பூங்கா, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், பாரதிய வித்யா பவன் ஆகியவை இணைந்து அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான 7-ஆவது அறிவியல் திறனாய்வுப் போட்டிகள் வரும் 23-ஆம் தேதி நடத்தப்பட உள்ளன.

இளைஞர்களின் படைப்பாற்றல் திறன், நினைவாற்றல், அறிவியல் தெரிவிப்பியல் திறன், எடுத்துரைக்கும் உத்தி ஆகியவற்றை வளர்ப்பதே இந்தப் போட்டியின் நோக்கமாகும். இதன் மூலம் மனித வள மேம்பாட்டினை மிகைப்படுத்தித் தன்னை வளர்ப்பதுடன், தேசிய வளத்துக்கும் நலத்துக்கும் பாடுபடும் வகையில் நடத்தப்படுகிறது.

இந்தப் போட்டியில் வெற்றி பெறும் 5 பேருக்கு அறிவு மலர், அறிவுக் கதிர், அறிவுத் தளிர், அறிவுத் துளிர், அறிவுப் புதிர் என அறிவியல் களஞ்சியம் விருதும், பரிசுகளும் அளிக்கப்பட இருக்கிறது. அத்துடன் இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்புவோர் தங்களின் பெயரை வரும் அக்.22-ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்தின் mtsacademychennai@gmail.com என்ற மின்னஞ்சலிலும் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மேலும், இது குறித்து 24951415, 9444991415 என்ற செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம் என சென்னை

Leave a Reply