அக்டோபர் 21ஆம் தேதி பொதுவிடுமுறை என அறிவிப்பு
ஏற்கனவே இந்த மாதம் காந்தி ஜெயந்தி, ஆயுதபூஜை, தீபாவளி என அதிக விடுமுறை நாட்கள் வந்துள்ள நிலையில் தற்போது விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதன் காரணமாக வரும் 21-ம் தேதி இந்த இரண்டு தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மட்டும் பொதுவிடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு சட்டசபை இடைத்தேர்தலை முன்னிட்டு, இந்த இரு தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.