ஃபனி புயல்: தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கிய மத்திய அரசு
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள ஃபனி புயல் இன்று அதி தீவிரமடைந்து அதிதீவிர புயலாக உருவாகி சென்னைக்கு அருகே சுமார் 700 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இந்த புயல் இன்று ஆந்திரா, ஒடிசா மேற்குவங்கம் கடலோரத்தின் வழியே வங்கதேசத்திற்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் தமிழகம், ஆந்திரா, ஒடிசா மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நிதி ஒதுக்கியுள்ளது. தமிழகத்திற்கு மட்டும் ரூ.309.37 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.