ஹைட்ரோ கார்பன் திட்டம்: மார்க்சிஸ்ட் கட்சி விழிப்புணர்வு பிரச்சாரம்

திருவாரூர் மாவட்டம் முழுவதும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து 7, 8, 9 தேதிகளில், இரு சக்கரவாகனங்களில் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட போவதாக மார்க்சிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் மாரிமுத்து தெரிவித்துள்ளார்

டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த திட்டத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மார்க்கிஸ்ட் கட்சி திட்டமிட்டுள்ளது

முதல்கட்டமாக இரு சக்கரவாகனங்களில் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட போவதாகவும் அதனையடுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply