பொதுமக்கள் வீட்டிலிருந்து ஓட்டம்
இந்தியாவில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை பயமுறுத்தி வரும் நிலையில் நேற்று அரியானா மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா வைரஸ் காரணமாக இந்திய மக்கள் பெரும் அச்சத்தில் உள்ள நிலையில் நேற்று இரவு திடீரென ஹரியானா மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது
இந்த நிலநடுக்கத்தை உணர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாம் ஆடத் தொடங்கியதாகவும், கட்டிடங்கள் குலுங்க தொடங்கியதாகவும் அவர்கள் பேட்டியளித்துள்ளனர்,.
நிலநடுக்கம் காரணமாக நடு இரவில் பொதுமக்கள் திடீர் திடீரென வீட்டில் இருந்து வெளியே வந்து விடிய விடிய தூங்காமல் இருந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இந்த நிலநடுக்கம் குறித்த சேத விபரங்கள் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.