ஹரியானாவில் இழுபறி: கூவத்தூர் பார்முலாவில் காங்கிரஸ்

ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற காங். எம்.எல்.ஏக்கள் டெல்லி விரைகின்றனர்; அனைத்து எம்எல்ஏக்களையும் ஒரே இடத்தில் தங்கவைக்க அக்கட்சி மேலிடம் முடிவு

பெரும்பான்மை கிடைக்காத பாஜக தங்கள் கட்சி எம்எல்ஏக்களை இழுக்கலாம் என்பதால் காங்கிரஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது

ஹரியானாவில் மொத்தம் 90 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்த நிலையில் பாஜக 40 தொகுதிகளிலும் காங்கிரஸ் 32 தொகுதிகளிலும் இதர கட்சிகள் 18 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க இன்னும் 6 எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தேவை என்பதால் அங்கு கூவத்தூர் பார்முலாவை காங்கிரஸ் கடைபிடிக்கின்றது

Leave a Reply