கோரிக்கை விடுத்த அரசு ஊழியர்கள்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக அரசு அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது

கடந்த இரண்டு மாதங்களாக 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே சுழற்சி முறையில் பணியாற்றி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் தமிழக அரசு சனிக்கிழமை தோறும் அரசு அலுவலங்கள் இயங்கும் என அறிவித்திருந்தது. ஆனால் தற்போது 100 சதவீத ஊழியர்கள் தொடர்ந்து வேலை செய்து செய்து வருவதால் மீண்டும் சனிக்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என அரசுக்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது

நேற்று முதல் தான் வேலைக்கு சேர்த்து உள்ள நிலையில் முதல் நாளை விடுமுறை குறித்த கோரிக்கையை அரசு ஊழியர்கள் எடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply