shadow

விராத் கோஹ்லியின் தைரியமான முடிவால் வெற்றியை நோக்கி இந்திய அணி

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே டெல்லியில் நடைபெற்று வரும் 3வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது கிளைமாக்ஸ் கட்டத்தை எட்டியுள்ளது. இன்று போட்டியின் கடைசி நாள் என்ற நிலையில் 410 ரன்கள் இலங்கைக்கு இலக்கு கொடுத்து இந்திய கேப்டன் விராத் கோஹ்லி தைரியமான முடிவை எடுத்துள்ளார்.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 536 ரன்களும், இலங்கை அணி 373 ரன்களும் எடுத்திருந்த நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 246 ரன்கள் எடுத்த நிலையில் தைரியமாக டிக்ளேர் செய்தது. இதனால் இலங்கை வெற்றி பெற 410 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.

விராத் கோஹ்லியின் தைரியமான முடிவுக்கு கைமேல் பலன் கிடைத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி நேற்று ஆட்டநேரமுடிவின்போது 16 ஓவர்களில் 31 ரன்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்துவிட்டது. இன்று ஒருநாள் முழுமையாக உள்ள நிலையில் இன்னும் 7 விக்கெட்டுக்களை இந்தியா வீழ்த்தினால் வெற்றிக்கனியை பறிக்கும்

Leave a Reply