என்ன காரணம்?

நாளை இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது விநாயகர் சதுர்த்தி திருவிழா பொதுவெளியில் கொண்டாட தமிழகம் உள்பட பல்வேறு அரசுகள் தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இருப்பினும் வீட்டில் விநாயகர் சிலைகளை வைத்து கொண்டாடுவதில் எந்தவித பிரச்சினையும் இல்லை ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விநாயகர் சிலைகளை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது

இதனால் விநாயகர் சிலைகளை செய்யும் கலைஞர்கள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் பெரிய பெரிய சிலைகள் ஏராளமாக விற்பனையாகும் என்றும், ஆனால் இந்த ஆண்டு சிறிய சிலைகள் கூட சரியாக விற்பனை ஆகவில்லை என்றும் விநாயகர் சிலை செய்யும் கலைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்

டெல்லி உள்பட நாடு முழுவதும் விநாயகர் சிலைகளை விற்பனை மந்தமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது

Leave a Reply