விடுமுறை நாட்களில் மாணவர்கள் ஏரியை தூர்வாரலாமே? நடிகர் விவேக்

தமிழகத்தில் உள்ள ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளை தூர் வாரி தயாராக வைத்திருந்தால்தான் வரும் மழைக்காலத்தில் பெய்யும் மழைநீரை சேமிக்க முடியும்.

இதனை தாமதமாக புரிந்து கொண்ட பொதுமக்கள் அரசினை எதிர்பாராமல் ஆங்காங்கே தூர்வாரி வருகின்றனர். இந்த நிலையில் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுத்த வேண்டும் என்று நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற கார் பேரணியை நடிகர் விவேக் துவக்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், விடுமுறை நாட்களில் தூர் வாரப்படாத ஏரி, குளங்களை பள்ளி, கல்லூரி மாணவர்கள் சரி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

Leave a Reply