விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாள் எனக்கு முக்கியமான நாள்: முத்தையா முரளிதரன்
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ள நிலையில் விடுதலைப்புலிகள் குறித்து முத்தையா முரளிதரன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கோத்தபாய ராஜபக்ச என்ற ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முத்தையா முரளிதரன், ‘தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சமாதான பேச்சுவார்த்தைகளின் போது வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அப்பாவி மக்களை அவர்கள் படுகொலை செய்ததாகவும், 2009-ல் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாள்தான் எனக்கு மிக முக்கியமான ஒருநாள் என்றும் கூறியுள்ளார்a.
முத்தையா முரளிதரனின் இந்த பேச்சு புலிகள் அமைப்பு ஆதரவாளர்களை அதிர்ச்ச்க்குள்ளாக்கியுள்ளது. இனிமேலும் முத்தையா முரளிதரன் திரைப்படத்தில் விஜய்சேதுபதி நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Leave a Reply
You must be logged in to post a comment.