முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவிருந்த நிலையில் பலத்த எதிர்ப்பு காரணமாக அந்த படத்தில் இருந்து விலகினார்

இந்த நிலையில் விஜய் சேதுபதியின் மகளுக்கு மர்ம நபர் ஒருவர் டுவிட்டர் மூலம் பாலியல் மிரட்டல் விடுத்திருந்தார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். இதில் அந்த இளைஞர் இலங்கையைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது

இந்த நிலையில், ‘என்னுடைய அடையாளம் வெளியே தெரிந்தால் என் வாழ்க்கையே வீணாகிவிடும்; என் குடும்பத்திற்காகவாவது என்னை மன்னித்து விட்டுவிடுங்கள்* என்று – விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்த இலங்கை இளைஞர் கதறியபடி வேண்டுகோள் விடுத்துள்ளார்

Leave a Reply