உடனே புதுப்பிக்க அறிவுறுத்தல்

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக வாகன ஆவணங்கள் காலாவதி தேதியை மத்திய அரசு நீட்டித்துள்ளது

ஆனால் அதே நேரத்தில் வாகன இன்சூரன்ஸ்களை புதுப்பிக்க எந்தவிதமான கால கால நீட்டிப்பு செய்யப்படவில்லை

வாகன இன்சூரன்ஸ் காலாவதியானல் உடனே புதுப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளனர்

மத்திய அரசு சமீபத்தில் ஓட்டுநர் உரிமை உள்ளிட்ட வாகன ஆவணங்கள் காலாவதி ஆனாலும் தேதியை நீட்டிக்க அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. டிசம்பர் 31 வரை காலாவதியான ஓட்டுனர் உரிமம் செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் தற்போது இந்த சலுகை அறிவிப்பு வாகன இன்சூரன்ஸ் பொருந்தாது என்று பொது இன்சூரன்ஸ் கவுன்சில் அறிவித்துள்ளது இதன்படி இன்சூரன்ஸ் காலாவதி தேதி முடிவடைந்த உடனேயே அதனை புதுப்பிக்க வேண்டுமென்றும் இதில் எந்த விதமான சலுகையும் கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply