லிப்டில் சிக்கிய தமிழக முதல்வர்: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேவர் குரு பூஜையில் கலந்து கொள்ள விமானம் மூலம் மதுரை செல்வதற்காக நேற்றிரவு சென்னை விமான நிலையத்துக்கு சென்றார். விஐபிக்களின் அறையில் தங்கியிருந்த அவர் விமானத்தில் ஏறுவதற்காக லிப்டில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தொழில்நுட்ப காரணமாக லிப்ட் பாதியில் நின்றது.
இதனால் அதிர்ச்சி அடைந்த முதல்வர் அலுவலக அதிகாரிகள் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக லிப்ட் பழுதுபார்க்கும் ஊழியர்களை வரவழைத்து முதல்வரை லிப்டில் இருந்து மீட்டனர். ஐந்தே நிமிடங்களில் ஊழியர்களின் திறமையால் முதல்வர் மீட்கப்பட்டார்.
பின்னர் முதல்வர் படியில் நடந்து வந்து விமானத்திற்கு சென்றார். இந்த சம்பவத்தால் விமானம் 15 நிமிடங்கள் தாமதமாக சென்றது. முதல்வர் சென்ற லிப்ட் எதனால் பாதியில் நின்றது என்பது குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.