shadow

ரெய்டு டென்ஷனே இல்லாமல் குழந்தைகள் தின வாழ்த்து கூறிய தினகரன்

கடந்த 9ஆம் தேதியில் இருந்து சசிகலா, தினகரன் உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சல்லடை போட்டு சோதனை செய்து வந்தனர். சோதனை நடந்து கொண்டிருந்தபோதே எந்தவித டென்ஷனும் இல்லாமல் தனது வீட்டில் கோ பூஜை நடத்திய தினகரன், தற்போது அவருடைய சொந்தங்கள் அனைவரும் டென்ஷனாக இருந்தாலும், அவர் கூலாக உள்ளார். இந்த நிலையில் இன்று குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு தனது டுவிட்டரில் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: உலகின் எதிர்காலமும் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷமும் குழந்தைகளே. குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சியையும் மகிழ்ச்சியான மனநிலையையும் எல்லா நேரத்திலும் நாம் உறுதி செய்திட வேண்டும்.

இன்றைய சூழ்நிலையில், உண்மை எது, பொய் எது என்பதை குழந்தைகள் பிரித்துணர்ந்து செயலாற்றிட பெற்றோர்களும் ஆசிரியர்களும் அவர்களுக்கு பக்கபலமாக இருந்து வழி நடத்திட வேண்டும். குழந்தை செல்வங்கள் அனைவருக்கும் எனது இதயம் நிறைந்த குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு தினகரன் குழந்தைகள் தின வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

Leave a Reply