ராஜஸ்தான் மாநில துணை முதலமைச்சர் பதவி விலகலா? காங்கிரஸ் கட்சியில் பரபரப்பு
காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகினால், தனது ஆதரவாளர்களுடன் காங்கிரஸ் கட்சில் இருந்து விலகுவேன் என ராஜஸ்தான் மாநில துணை முதலமைச்சர் சச்சின் பைலட் கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி சச்சின் பைலட்டுடன் ராஜஸ்தன் எம்.எல்.ஏக்கள் சிலரும் விலகி ஆட்சிக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் சில சுயேட்சை எம்.எல்.ஏக்கள் மற்றும் பாஜக எல்.எல்.ஏக்களின் ஆதரவுடன் சச்சின் பைலட் முதலமைச்சராக பதவியேற்க திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Leave a Reply
You must be logged in to post a comment.