shadow

ரஜினி எந்த தொகுதியில் நின்றாலும் எதிர்த்து போட்டியிடுவேன்: இயக்குனர் கவுதமன்

இரண்டே இரண்டு படம் இயக்கிய இயக்குனர் கவுதமன், திடீரென தமிழ் புரட்சியாளராக மாறி தற்போது அரசியல் கட்சியும் தொடங்கவுள்ளார். அதுமட்டுமின்றி பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக வழக்கம்போல் மற்ற அரசியல்வாதிகளைபோல் ரஜினியை எதிர்க்க அவர் முடிவு செய்துள்ளார்.

சீமானின் ‘நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளராக இருந்த கவுதமன், திடீரென புதிய கட்சியை நேற்று தொடங்கியுள்ளார். த்னது புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடி, தைத் திருநாள் முடிந்த பின்னர் நடைபெறும் மாநில மாநாட்டில் அறிவிக்கப்படும் என்று கூறியா கவுதமன், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பண்பாட்டை வென்றெடுத்த இளைஞர்கள், அரசியலையும் வென்றெடுப்பார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் ரஜினிகாந்த் தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிட நின்றாலும் அவரை எதிர்த்து போட்டியிடவுள்ளதாகவும், தமிழ் இனத்தை, மொழியை காக்கவும், எங்கள் உரிமையை நிலைநாட்டுதற்காகவும் அரசியல் இயக்கம் தொடங்குகிறோம் என்றும் இயக்குநர் கவுதமன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply