யுவராஜ்சிங் செய்த சாதனையை அசிங்கப்படுத்திய ஷிவம் டூபே

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் இறுதி டி20 போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்யாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் தொடரை வென்றது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் நேற்றைய போட்டியில் ஷிவம் டூபே ஒரு மோசமான சாதனையை செய்து இந்திய அணிக்கு இழுக்கை பெற்றுத் தந்துள்ளார். நேற்று அவர் வீசிய ஒரு ஓவரில் மொத்தம் 34 ரன்கள் எடுக்கப்பட்டன.

இதற்கு முன்னால் யுவராஜ்சிங் ஒரே ஓவரில் 36 ரன்கள் எடுத்து சாதனை செய்த நிலையில் அந்த சாதனையை அசிங்கப்படுத்தும் அளவிற்கு 34 ரன்கள் கொடுத்து ஒரு ஓவரை ஷிவம் டூபே வீசி உள்ளதாக கிரிக்கெட் ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இன்னும் 2 ஓவர்கள் அவர் வீசியிருந்தால் நியூசிலாந்து அணி வெற்றி நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும் என்று அவர்கள் கூறி வருகின்றனர்

Leave a Reply