பெங்களூர் மாநகராட்சி அதிரடி அறிவிப்பு
முகக்கவசம் அணிந்து தான் வெளியே செல்ல வேண்டும் என உலகம் முழுவதும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது ஆனால் பெங்களூர் மாநகராட்சி வாக்கிங் செல்பவர்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் தனியாக செல்பவர்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை என்று அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
காரில் அல்லது இரு சக்கர வாகனத்தில் ஒருவர் மட்டுமே சென்றால் அவர் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது என்று பெங்களுர் மாநகராட்சி அறிவித்துள்ளது
அதேபோல் ரன்னிங் ஜாகிங் வாக்கிங் செல்பவர்கள் முகக்கவசம் அணிய வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
இதனை பெங்களூர் மாநகராட்சி ஆணையர் மஞ்சுநாத் பிரசாத் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.