சொந்த ஊரில் மரியாதை

மகாராஷ்டிர மாநிலத்தில் பணியின்போது உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் பிரகாஷ்-க்கு சொந்த ஊரில் மரியாதை செய்யப்பட்டது.

சமீபத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் ராணுவத்தில் பணிபுரிந்த தமிழக வீரர் பிரகாஷ், ராணுவ உபகரணங்களை பழுது பார்த்தபோது மெத்தனால் வாயு தாக்கியதில் திடீரென மரணம் அடைந்தார்.

இதனையடுத்து அவரது உடல் அவரது சொந்த ஊரான மதுரை மேலூர் அருகே கோட்டப்பட்டி என்ற கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது

ராணுவ வீரர் பிரகாஷ் உடலுக்கு உறவினர்கள், பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்

Leave a Reply