மூளைச்சாவு அடைந்த மனைவி: உடல் உறுப்பு தானம் செய்த கணவர்:
காதலர் தினத்தில் மூளைச்சாவு அடைந்த மனைவியின் ஐந்து உடல் உறுப்புகளை கணவர் ஒருவர் தானமாக கொடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் வேலூர் அருகே நடந்துள்ளது
மென்பொறியாளர் கவுதம்ராஜ் என்பவரது மனைவி கோகிலா என்பவர் எதிர்பாராத வகையில் இன்று மூளைச்சாவு அடைந்தார். இறப்புக்கு பின்னும் மனைவியின் உடல் உறுப்புகள் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் மூளைச்சாவு அடைந்த மனைவி கோகிலாவின் இதயம் உட்பட ஐந்து உடல் உறுப்புகளை மென்பொறியாளர் கவுதம்ராஜ் தானமாக அளித்தார் .
இந்த சம்பவம் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை அனைவரிடத்திலும் ஏற்படுவது மட்டுமின்றி மனைவி மீது அவர் வைத்திருந்த அளவில்லா அன்பை வெளிப்படுத்துவதாக நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்
Leave a Reply
You must be logged in to post a comment.