shadow

முதல்வர் ஈபிஎஸ் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான ஊழல் புகாரை சிபிஐ விசாரிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான டெண்டர் புகாரை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை செய்த நிலையில் அவர்கள் சரியாக விசாரிக்க வில்லை எனவும் வழக்கை சிபிஐக்கு மாற்றி விசாரிக்கவும் சென்னை ஐகோர்ட் சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஒரு மாநிலத்தின் முதல்வர் மீதே சிபிஐ விசாரணை செய்ய கோர்ட் உத்தரவிட்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply