முதலிடத்தை இழந்த சிஎஸ்கே: புள்ளிப்பட்டியலில் முந்தியது டெல்லி

நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. சென்னை, டெல்லி ஆகிய இரு அணிகளுமே 14 புள்ளிகள் பெற்றிருந்தாலும், ரன்ரேட் அடிப்படையில் டெல்லி அணி முதலிடத்தை பெற்றது.

நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி கொடுத்த 192 என்ற இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணி, 19.2 ஓவரில் 193 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரிஷப் பண்ட் அபாரமாக விளையாடி 78 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார். தவான் 54 ரன்களும், பிபிஷா 42 ரன்களும் எடுத்தனர்.

இன்றைய போட்டி சென்னை மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. இன்றைய போட்டியில் சென்னை அணி வென்றால் மீண்டும் முதலிடத்தை பிடித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply