மீண்டும் தமிழ் படத்தை தயாரிக்கும் போனிகபூர்

பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிப்பில் ‘பிங்க்’ ரீமேக் திரைப்படமான ‘நேர் கொண்ட பார்வை’ உருவாகி வருகிறது என்பதும் இதில் அஜித் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. இந்த படம் வரும் மே அல்லது ஜூனில் வெளியாகவுள்ளது

இந்த நிலையில் பிங்க் ரீமேக்கை அடுத்து ‘பாதாய் ஹோ என்ற இன்னொரு சூப்பர் ஹிட் இந்தி படத்தின் ரீமேக் உரிமையை பெற்றுள்ள போனிகபூர், இந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாள, மற்றும் கன்னட ஆகிய நான்கு மொழிகளில் தயாரிக்க திட்டமிட்டுள்ளார். ஆயுஷ்மான் குரானா, சான்யா மல்ஹோத்ரா, நீனா குப்தா உள்பட பலர் நடித்திருந்த இந்த படம் ரூ.29 கோடி பட்ஜெட்டில் உருவாகி ரூ.221 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் ஒரு இளம் நடிகர் நடிக்கவுள்ளதாகவும் அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது

Leave a Reply