மிளகு சாதம் சாப்பிட்டால் பறந்தோடும் சளி
சளி தொல்லை, காய்ச்சல் இருப்பவர்களுக்கு மிளகு சாதம் செய்து கொடுக்கலாம். ருசியும் அருமையாக இருக்கும். இன்று இந்த சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
அரிசி – கால் கிலோ
மிளகு – 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
வெங்காயம் – 1
முந்திரிப் பருப்பு – 5
நெய் – சிறிதளவு
கடுகு, வேர்க்கடலை – சிறி்தளவு
கறிவேப்பிலை – தேவைக்கு
உப்பு – தேவைக்கு
செய்முறை:
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரிசியை நன்றாக கழுவி வேகவைத்து உதிரி சாதமாக வடித்துக்கொள்ளவும்.
வாணலியில் மிளகு, சீரகம் இரண்டையும் தனித்தனியாக வறுத்தெடுத்து பொடித்துக்கொள்ளவும்.
பிறகு வாணலியில் நெய் ஊற்றி அது உருகியதும் கடுகு, வேர்க்கடலை, முந்திரிப்பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.
பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கி அவற்றுடன் வேகவைத்த சாதம், பொடித்த மிளகு, சீரகம், உப்பு ஆகியவற்றை சேர்த்து கிளறி சிறிது நேரம் மூடிவைத்துவிட்டு இறக்கவும்.
ருசியான மிளகு சாதம் ரெடி.
Leave a Reply
You must be logged in to post a comment.