மருத்துவர்களின் அறிவுறுத்தலுக்கு பின் மதிய உணவை எடுத்து கொண்ட லாலு பிரசாத் யாதவ்
மதிய உணவை தவிர்த்துவந்த பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ், மருத்துவர்களின் அறிவுறுத்தலுக்கு பின்னர் தற்போது முறையாக உணவு உண்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவை தேர்தலில் போட்டியிட்ட லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், அனைத்து தொகுதிகளிலுமே தோல்வியைச் சந்தித்தது. இந்நிலையில், ஊழல் வழக்கில் தண்டனை பெற்று, ஜார்க்கண்ட் மாநில ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் லாலு பிரசாத் யாதவ், தேர்தல் முடிவுகளுக்கு பின்னர், மதிய உணவுகளை தவிர்த்துவருவதாக அவரது மருத்துவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் லாலு தற்போது முறையாக உணவு உட்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவர்கள், லாலுவிடம் அவரது உடல் நிலை குறித்து அறிவுறுத்திய நிலையிலேயே மதிய உணவை தவிர்க்கும் முடிவை அவர் கைவிட்டதாக கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.