மயாங்க் இரட்டைச்சதம், ரோஹித் சதம்: இந்தியா 502/7 டிக்ளேர்

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 502 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. தொடக்க ஆட்டக்காரரான மயாங்க் அகர்வால் 215 ரன்களும், ரோஹித் சர்மா 176 ரன்களும் எடுத்துள்ளனர்.

இதனையடுத்து முதல் இன்னிங்ஸ் விளையாட களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் மட்டுமே எடுத்து தத்தளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

அஸ்வின் 2 விக்கெட்டுக்களயும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 463 ரன்கள் பின்னடைவில் உள்ளதால் ஃபாலோ ஆன் ஆக வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருதப்படுகிறது

Leave a Reply