மன்மோகன்சிங் பதவிக்காலம் நிறைவு: மீண்டும் போட்டியிடுவாரா?
அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் 14ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதேபோல் அதே மாநிலத்தில் இருந்து போட்டியிட்ட சந்தின்ஸ் குஜுர் என்பவரின் பதவிக்காலமும் முடிவடைகிறது
இந்த நிலையில் அசாமில் காலியாகும் இந்த 2 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 21ம் தேதியன்று வேட்புமனு தாக்கல் தொடங்குவதாகவும், ஜூன் 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கடந்த 30 ஆண்டுகளாக மாநிலங்களவை எம்பியாக மன்மோகன் சிங் நீடித்து வரும் நிலையில் மீண்டும் அவர் போட்டியிடுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
Leave a Reply
You must be logged in to post a comment.