shadow

மத்திய அரசிடம் கேட்கிற விதத்தில் கேட்டால் தான் நிதி கிடைக்கும்: துரைமுருகன்

கஜா புயல் நிவாரண நிதியாக திமுக ரூ.1 கோடி நேற்று அறிவித்த நிலையில் இன்று திமுக பொருளாளர் துரைமுருகன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரின் இல்லத்தில் நேரில் சந்தித்து ரூ.1 கோடியை வழங்கினார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் துரைமுருகன் கூறியதாவது: கஜா புயல் சீரமைப்பு பணிகளுக்காக திமுக அறிவித்த ஒரு கோடி ரூபாய் நிதிக்கான காசோலையை முதலமைச்சரிடம் வழங்கினேன். புயல் நிவாரணப் பணிகளில் தமிழக அரசுக்கு அரசியல் வேறுபாடில்லாமல் திமுக ஒத்துழைக்கும்.

மக்களை திமுக போராட தூண்டுவதாக அனுபவமற்ற அமைச்சர்கள் கூறி வருகின்றனர். மத்திய அரசிடம் கேட்கிற விதத்தில் கேட்டால் தான் நிதி கிடைக்கும் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply