மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் சுமார் 48 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிராவில் இன்னும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கவில்லை
ஆனால் அதே நேரத்தில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். ஊரடங்கு விதிக்கும் வகையில்
மக்கள் நடந்து கொள்ள வேண்டாம். மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்
ஊரடங்கு உத்தரவால் பொருளாதாரம் சிக்கல் ஏற்படும் என்பதால் ஊரடங்கு உத்தரவு இதுவரை பிறப்பிக்கப்படவில்லை. மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்
Leave a Reply
You must be logged in to post a comment.