போலீஸ் உயரதிகாரி மீது உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வந்த பொன்.ராதாகிருஷ்ணன்
சமீபத்தில் மத்திய அமைச்சர் கேரளாவில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு சென்றபோது நிலக்கல்லில் பொறுப்பில் இருந்த அதிகாரி யதீஷ் சந்திரா என்பவர் அவரை தடுத்து நிறுத்தினார். பின்னர் அவரை மட்டும் கோவிலுக்கு அனுமதித்து அவருடன் வந்தவர்களை அனுமதிக்க மறுத்துவிட்டார்.
இந்த பிரச்சனை பெரிய விஷயமாக மாறிவிட்ட நிலையில் யஷீஷ் சந்திராம் இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் சபரிமலையில் தான் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மக்களவையில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்துள்ளார்ர். நிலக்கல்லில் பொறுப்பில் இருந்த அதிகாரி யதீஷ் சந்திரா, தன்னிடம் கடுமையாக நடந்து கொண்டதாகவும், நாடாளுமன்ற உறுப்பினரான தம்மை தடுத்து நிறுத்தியதாகவும் குற்றம்சாட்டினார்
Leave a Reply
You must be logged in to post a comment.