shadow

பொன் மாணிக்கவேல் தலைமையில் எங்களால் செயல்பட முடியாது: ஏடிஎஸ்பி இளங்கோ

சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக சென்னை ஐகோர்ட்டால் பொன் மாணிக்கவேல் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது தலைமையில் எங்களால் செயல்பட முடியாது என ஏடிஎஸ்பி இளங்கோ அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

தனித்தனி விசாரணை அதிகாரிகள் இருந்தும் அவர்களை சுதந்திரமாக பணிசெய்ய பொன் மாணிக்கவேல் அனுமதிக்கவில்லை. காணாமல்போன சிலைகள் பலவற்றை மீட்க முயற்சி எடுக்கவில்லை; ஆனால் கைதுசெய்ய நிர்பந்திக்கிறார். பொன் மாணிக்கவேல் தலைமையில் எங்களால் செயல்பட முடியாது

சிலைக்கடத்தல் வழக்குகளை சுதந்திரமாக விசாரிக்க பொன்.மாணிக்கவேல் எங்களை விடவில்லை. சிலைக்கடத்தல் விவகாரத்தில் அழுத்தத்திற்கு மத்தியில் பணியாற்றி வருகிறோம் என ஏடிஎஸ்பி இளங்கோ குற்றச்சாட்டியுள்ளார்.

Leave a Reply